Posts

செங்கோட்டை தாலுகா பறிபோனகதை

மூன்றாம் பேருரை 1956 - ஜுலைத் திங்கள் 26 –ம் தேதி திரு. நேசமணி : இந்திய அரசியல் தேசப்படத்தைத் திருத்தி அமைப்பதில் கூட்டுக் குழுவினர் சிறப்பு மிக்க பணியாற்றியுள்ளனர். ஆனால் எனது குற்றச்சாட்டுகள் யாதைனில், இவர்கள் ஏனைய மாநிலங்களின் எல்லைக்கோடுகளைத் திருத்தியமைக்கும் தருணங்களில் ஒரே சீரான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதேயாகும். குறிப்பிட்டுக் கூறுவதாயின், செங்கோட்டைத் தாலுகாவைக் குறித்து சிலவற்றை நான் கூறித்தான் ஆக வேண்டும். திருவிதாங்கூர் - கொச்சியைச் சார்ந்த இத்தாலுகாவைச் சென்னை மாநிலத்துடன் இணைத்து விடலாமைன்று பரிந்துரைக்கப்பட்டுள்து. திருவிதாங்கூர் - கொச்சியைச் சார்ந்த தமிழ்த் தாலுகாக்களின் தலைவிதியை நிர்ணயம் செய்கின்ற கூட்டுக் குழுவில், அப்பிரதேசங்களைச் சார்ந்த எவரையும் பிரதிநிதியாகச் சேர்த்துக் ககாள்ளாமல், ஒரு தலைபட்சமாக முடிவெடுத்திருப்பது துரதிஷ்டமானதே. எங்களுடன் கலந்து ஆலோசிக்காமலும், எங்களது அறிவுக்குக் கொண்டு வராமலும், திருவிதாங்கூர் - கொச்சி மாநிலம் மற்றும் சென்னை மாநிலங்களுக்கிடையே தன்னிச்சையாகச் செய்து கொண்ட ஒப்பந்தம் எங்கள் தலையின் மேல் கைவைப்பது போன்றதாகிவி...

இந்திய பாராளுமன்றத்தில் திரு.எ.நேசமணியின் பேருரைகள் (1955 டிசம்பர் திங்கள் 14, 15 நாட்கள் மற்றும் ஜுலை திங்கள் 1956) அ.முதற்பேருரை நாள் 14-12-1955 புதன்கிழமை

  இந்திய பாராளுமன்றத்தில் திரு.எ.நேசமணியின் பேருரைகள் (1955 டிசம்பர் திங்கள் 14, 15 நாட்கள் மற்றும் ஜுலை திங்கள் 1956) அ.முதற்பேருரை நாள் 14-12-1955 புதன்கிழமை   திரு.எ.நேசமணி: துணை அவைத் தலைவர் ஐயா அவர்களே, எமது கன்னிப் பேச்சை இச்சபையில் ஆற்றுவதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன்.   துணை அவைத் தலைவர் (குறுக்கிட்டு) : மதிப்பிற்குரிய உறுப்பினர் அவர்கள் கன்னியாகவே தொடர விரும்புகிறாரா?   திரு. நேசமணி   திருவிதாங்கூர் - கொச்சி மாநிலத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நலன் வேண்டி இங்கு ஒலிக்கின்ற ஒரே குரல் எனது குரல் மட்டுமே ஆகும். மாநிலங்கள் புனரமைப்புக் குழுவின் அறிக்கையில் 83-வது பக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடித் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசின் ஒரே பிரதிநிதி நான் ஒருவனேயாகும், தொன்று தொட்டே திருவிதாங்கூர் - கொச்சியில் தமிழ் மக்கள் பெருவாரியாக வாழ்கின்ற ஒன்பது தாலுகாக்களையும் தமிழ் நாட்டுடன் இணைத்திட வேண்டும் என்பதே திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக்காள்ளப்பட்ட கொள்கையாகும். அவைகள் முறையே தோவாளை, அகத்தீசுவரம், கல...